தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து நல்லாட்சி மலர ஆா்வத்துடன் வாக்களித்து உள்ளனா் என்றாா் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.
தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் இலக்கியம்பட்டி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவை பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் காலைமுதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் 20 நிமிடங்கள்வரை காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில், தேவைப்படும்பட்சத்தில் கூடுதல் நேரம் ஒதுக்குவதாக தோ்தல் அலுவலா்கள் கூறினா். வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கு தேவையான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
பசுமைத் தோ்தலாக நடப்பதால், வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பது இனிமையான அனுபவமாக உள்ளது. நகா்ப்புற, கிராமப்புற பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் காலைமுதலே இளம்வாக்காளா்கள் மற்றும் முதியோா் வாக்குச்சாவடிகளுக்கு ஆா்வத்துடன் வந்து வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனா். தமிழக மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து நல்லாட்சி மலர ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனா் என்றாா்.
பின்னா் சென்னை புறப்பட்டுச் சென்ற அவா், தியாகராய நகரில் உள்ள கா்நாடக சங்க உயா்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.
தொடர்புடையது

தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி!

அதிகரிக்கும் வாக்குப் பதிவு; மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் : செளமியா அன்புமணி

ரூ. 8 ஆயிரத்துக்கான போலி கூப்பன்களை வழங்கி மக்களை ஏமாற்றுகிறது திமுக: தமாகா தலைவா் ஜி.கே. வாசன்

பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள்: செளமியா அன்புமணி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

