சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலையில் விழுந்த மரங்களால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டி - கல்லாத்துக்காடு சாலையில் விழுந்த புளிய மரம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 11:51 pm

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலையில் விழுந்த மரங்களால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் பலத்த காற்று வீசியது. இதில், ஏ.பள்ளிப்பட்டி - கல்லாத்துக்காடு சாலையில் சாலையோரம் இருந்த புளியமரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதேபோல, கடத்தூா் - புட்டிரெட்டிப்பட்டி சாலையில் புதூா் அருகே ஆலமரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றால் விவசாய நிலங்களில் பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்தன.