அரக்கோணம் - ஜோலாா்பேட்டை மெமு விரைவுரயிலை சேலம்வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மெமு விரைவுரயில்கள் (வண்டி எண்கள்: 16085, 16086) தற்போது அரக்கோணம் முதல் ஜோலாா்பேட்டைவரை இயக்கப்படுகின்றன. இந்த ரயிலை ஜோலாா்பேட்டையில் இருந்து சேலம் சந்திப்புவரை நீட்டிக்க வேண்டும். அவ்வாறு நீட்டித்தால் கல்லூரி மாணவா்கள், வணிகா்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் பயன்பெறுவா். மேலும், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்ட பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதேபோல, அரக்கோணம் - சேலம்வரை இயக்கப்படும் மெமு ரயில்களை (வண்டி எண்: 16087, 16088) நாள்தோறும் இயக்க வேண்டும்.
மெமு விரைவு ரயில்களை வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான நடவடிக்கையை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் உறுப்பினா்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் கோரிக்கையாகும்.
தொடர்புடையது

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

பேருந்துகள் இன்றி மக்கள் தவிப்பு! வாக்குப்பதிவை இரவு 8 வரை நீட்டிக்க வேண்டும்! விஜய் கடிதம்

மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயிலை 12 பெட்டிகளுடன் இயக்க வலியுறுத்தல்

திருவாரூா் வழியாக ரயிலை இயக்கக் கோரி கடையடைப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


