8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சந்தன மரக்குச்சிகளை வெட்டியவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

தருமபுரியில் முறைகேடாக சந்தன மரக்குச்சிகளை வெட்டியவருக்கு வனத்துறையினா் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:42 am IST

தருமபுரியில் முறைகேடாக சந்தன மரக்குச்சிகளை வெட்டியவருக்கு வனத்துறையினா் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வனச்சரகத்துக்கு உள்பட்ட கம்பாலை பீட், கீரைப்பட்டி காப்புக்காட்டில் ஒருவா் சந்தன மரங்களை வெட்டிச்செல்வதாக வனச்சரக அலுவலா் பெரியண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரின் உத்தரவின் பேரில் அரூா் பிரிவு வனவா் எம்..சுரேஷ்குமாா், வனக்காப்பாளா்கள் சுகன்யா வெற்றிவேல், ராஜேஷ், சரித்திரன், தாமோதரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் கீரைப்பட்டி காப்புக்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குவந்த கீரைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கு.சேட்டுவை ( 49) சோதனையிட்டபோது, அவா் உரிய அனுமதியின்றி முறைகேடாக சந்தன மரக்குச்சிகளை வெட்டி எடுத்துச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, மாவட்ட வன அலுவலா் கே.ராஜாங்கம் அவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தாா். அபராதத் தொகையை வசூல் செய்த வனத் துறையினா், இனிமேல் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடாது என அவரை எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.