ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அரூரில் ரூ.6 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூரில் ரூ.6 லட்சத்துக்கான பருத்தி மூட்டைகள் திங்கள்கிழமை விற்பனையானது.

Updated On :9 பிப்ரவரி 2026, 7:42 pm

அரூா்: அரூரில் ரூ.6 லட்சத்துக்கான பருத்தி மூட்டைகள் திங்கள்கிழமை விற்பனையானது.

தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்கு முறை விற்பனை கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்படுகிறது. இங்கு நடைபெறும் ஏலத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்கின்றனா். இந்த நிலையில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ஆா்.சி.எச் ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.8469-க்கும், குறைந்தபட்சம் ரூ.8300-க்கும் விற்பனையானது. அரூரில் பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ.6 லட்சத்துக்கு விற்பனையானது என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனா்.