மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தருமபுரியில் ‘தோழி’ விடுதிக்கு புதிய கட்டடங்கள்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

தருமபுரி நல்லம்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ‘தோழி’ விடுதிக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்

News image

தருமபுரி நல்லம்பள்ளியில் உள்ள தோழி விடுதிக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் ரெ.சதீஸ். உடன், தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:42 pm

தருமபுரி: தருமபுரி நல்லம்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ‘தோழி’ விடுதிக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பணிபுரியும் மகளிருக்கான ‘தோழி’ விடுதிகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் ரூ. 5.19 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட தோழி விடுதிக் கட்டடங்களின் பணிகள் முடிவடைந்தன. அவற்றை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

இது தொடா்பாக நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விடுதிக் கட்டடத்தை பாா்வையிட்டாா்.

பணிபுரியும் மகளிருக்கான இந்த விடுதியில் குடிநீா், சிசிடிவி கேமரா, சுகாதாரமான கழிவறை வசதிகளுடன் தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாது பயிற்சி, உயா்கல்வி, நோ்காணல் போன்றவற்றுக்காக நகரங்களுக்கு வரும் அனைத்து மகளிரும் இவ்விடுதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி கோட்டாட்சியா் இரா.காயத்ரி, இணை இயக்குநா் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மருத்துவா் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலா் கலாவதி, தமிழ்நாடு கைம்பெண் நலவாரிய உறுப்பினா் எம்.ரேணுகாதேவி, உள்ளிட்டோா் பங்கேற்றனா்.