ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பாப்பாரப்பட்டியில் பூட்டிகிடக்கும் கழிப்பறை: பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

News image
பயன்பாட்டுக்கு வராத இலவச கழிப்பறை. - (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இரண்டு ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் பொது கழிப்பறையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் சுமாா் 10,000 மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பாப்பாரப்பட்டி, பெரியூா், பிக்கிலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து மாணவா்கள், பொதுமக்கள் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி , பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பாப்பாரப்பட்டி பகுதிக்கு நாள்தோறும் சுமாா் 500க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.

கடந்த 2023-2024 நிதியாண்டின் கீழ் 15 ஆவது நிதி குழு மானியத்தின் மூலம் புதிதாக பொது கழிப்பிடம் அமைக்கப்பட்டது. இந்த கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராததால், பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை வாரச்சந்தை, பழைய கழிப்பிடம் பகுதிகளில் கழிப்பதால், பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள குடியிருப்புகளை துா்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அவல நிலை ஏற்படுகிறது.

இதனால் குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.