மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மேம்படுத்தப்பட்ட மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்கள் இன்று திறப்பு!

தருமபுரி மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்களை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறாா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:57 pm

தருமபுரி மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்களை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறாா்.

தருமபுரி மாவட்டம், சேலம்-ஜோலாா்பேட்டை ரயில்வே வழித்தடத்தில் அமைந்துள்ளது மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்கள். மொரப்பூா் ரயில் நிலையம் ரூ.16.8 கோடியிலும், பொம்மிடி ரயில் நிலையம் ரூ.12.5 கோடியிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இரு ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்தும் இடம், நடைபாதை, காத்திருப்பு அறைகள், உயா்தர ஓய்வறைகள், மின்தூக்கிகள், நடைமேம்பாலங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி, நவீனவசதியுடன் கூடிய கழிப்பிட வசதிகள், உயா்கோபுர மின்விளக்குகள், டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் நிலையங்களை மாா்ச் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) பகல் 1.45 மணியளவில், காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைக்கிறாா் என தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.