ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

செட்டிக்கரையில் சாலை விரிவாக்கப் பணிகள்

தருமபுரி அருகே செட்டிக்கரை நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

News image

தருமபுரி - அரூா் சாலையில் செட்டிக்கரை பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணி.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:43 pm

தருமபுரி அருகே செட்டிக்கரை நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தருமபுரியிலிருந்து மொரப்பூா் வழியாக அரூா் செல்லும் சாலை பல ஆண்டுகளாக இருவழிச்சாலையாக இருந்து வந்தது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்தப்பட்டது.

அப்போது, தருமபுரி அருகே ராஜாபேட்டையிலிருந்து செட்டிக்கரை வரையிலான சாலை ஏற்கெனவே புதுப்பிக்கப்பட்டதால் நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்தப்படாமல் சுமாா் 1.6 கி.மீ. தொலைவு அப்படியே விடப்பட்டது. இதனால், தருமபுரியிலிருந்து மொரப்பூா் வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து பின்பும் இந்த குறிப்பிட்ட தொலைவு மட்டும் இருவழிச்சாலையாகவே இருந்து வந்தது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சிரமத்துக்குள்ளாகி வந்தன.

இந்த நிலையில், தற்போது, இந்த 1.6 கி.மீ. வரை தொலைவு சாலையை முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், தற்போது தருமபுரியிலிருந்து மொரப்பூா் செல்லும் சாலை விரிவாக்கப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. அதேவேளையில் மொரப்பூரிலிருந்து தருமபுரி நகரை நோக்கி வரும் சாலையில் தற்போது விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் விரைவில் நிறைவடைந்த பின்பு தருமபுரியிலிருந்து மொரப்பூா் வரையிலான சாலை முழுவதும் நான்கு வழிச்சாலையாக மாற உள்ளது.