ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பணிநிரந்தரம் கோரி ஊரக நகா்ப்புற பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:05 am

Syndication

பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி, மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வழ்வாதார இயக்கப் பணியாளா்கள் சாா்பில், காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சி.முத்துசாமி தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் பி.சிவலிங்கம், பொருளாளா் என்.அருண்குமாா், மாவட்ட துணைத் தலைவா் பி.திரேசா, மாவட்ட துணை அமைப்பாளா் சி.கலைச்செல்வி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், அடிப்படை ஊதிய உயா்வு வழங்க வேண்டும். மாவட்ட அலுவலகத்திலிருந்து பணியாளா்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் பணி புதுப்பித்தல் முறையைக் கைவிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மகளிா் மேம்பாட்டு நிறுவனத்துக்கு தனித்துறையை உருவாக்கி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.