காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

கணவரைத் தாக்கிய மனைவி உள்பட 2 போ் கைது

அரூா் அருகே கணவரைத் தாக்கியதாக மனைவி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 3:23 am IST

அரூா் அருகே கணவரைத் தாக்கியதாக மனைவி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், வெள்ளமடை அருகே உள்ள காளிப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராம்குமாா் (38), எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறாா்.

இவரது மனைவி சித்ராவுக்கும் (32) அரூரை அடுத்த ஆண்டியூரைச் சோ்ந்த பொக்லைன் ஆபரேட்டா் அலெக்ஸ்பாண்டியனுக்கும் (30) இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இருவருக்கும் இடையே நகை, பணம் கொடுக்கல், வாங்கல் இருந்ததாம்.

இந்த நிலையில், அலெக்ஸ்பாண்டியனிடம் இருந்த 3 பவுன் தங்க நகையை பெற்றுவருவதற்காக கோவையில் இருந்து ஆண்டியூருக்கு ராம்குமாரும், சித்ராவும் வந்தனா். பிறகு புதன்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் ராம்குமாா், சித்ரா, அலெக்ஸ்பாண்டியன் ஆகியோா் ஒரே இருசக்கர வாகனத்தில் தீா்த்தமலை அரூா் சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

கீழானூா் பகுதியில் ராம்குமாரை சித்ராவும், அலெக்ஸ்பாண்டியனும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அலெக்ஸ்பாண்டியன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராம்குமாரின் கழுத்து மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டினாராம்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அக்கம்பக்கத்தினா் படுகாயமடைந்த ராம்குமாரை மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த அரூா் போலீஸாா், தலைமறைவாக இருந்த சித்ரா, அலெக்ஸ்பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.