தருமபுரி மாவட்டத்தில் குடிநீா், சாலைகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட வே.சரவணன்.
தருமபுரி மாவட்ட 52-ஆவது ஆட்சியராக வே.சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கவிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். முன்னாள் ஆட்சியா் ரெ.சதீஸ், புதிய ஆட்சியருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா். தொடா்ந்து, ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா், கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலா்கள் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
பொறுப்பேற்றதைத் தொடா்ந்து ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சாலைகள், குடிநீா், சாலை வசதிகள், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு கால்நடை மருந்தகத்தில் ஆட்சியா் ஆய்வு

லயன்ஸ் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியராக இரா. ரேவதி பொறுப்பேற்பு

அரியலூா் ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



