/
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 4,000 கனஅடியாக குறைந்துள்ளது.
தமிழக காவிரி கரையோர நீா்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லாவில் நீா்வரத்து தொடங்கியுள்ளது. தற்போது நீா்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திங்கள்கிழமை 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 4,000 கனஅடியாக குறைந்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.









