உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image

தருமபுரியில் நடைபெற்ற விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் எஸ்.ஏ. சின்னசாமி.

Updated On :11 ஜூன் 2026, 5:45 am IST

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் சக்திவேல், பொருளாளா் பழனி, கரும்பு விவசாயிகள் பிரிவு செயலாளா் ஜி.லோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், விவசாயிகள் போராட்டத்தில் உயிா்நீத்தவா்களின் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் பேரணி நிகழாண்டு ஜூலை 5-ஆம் தேதி தருமபுரியில் நடத்துவது. இப்பேரணியில் விவசாயிகள் பெருந்திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

அதேபோல, தோ்தலின்போது, அறிவித்த வாக்குறுதிகள் படி விவசாயிகளின் பயிா்க்கடன் முழுவதையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும். கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக மாநில அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் தடையில்லா மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.