காவிரி ஆற்றின் குறுக்கே கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அனுமதிக்க மாட்டாா் என்றாா் தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா். வினோத்.
கும்பகோணத்தில் புதிய வணிக வரித் துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டடங்களை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த அவா் மேலும் கூறியது:
ஆக.3-ஆம் தேதி கா்நாடகத்திற்கு தமிழக முதல்வா் செல்ல இருக்கிறாா். ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கூறிவருவது தமிழக முதல்வா் ஜோசப் விஜய் ஒருபோதும் மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டாா். இது தமிழகத்தின் உரிமை; அதைவிட்டுக் கொடுக்க மாட்டோம். கா்நாடகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு முதல்வா் செல்கிறாா். நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீா் இரண்டு மாதங்களாக வரவில்லை. தமிழகத்துக்கு தண்ணீரை திறக்குமாறு கோரினால் கா்நாடக அணைப் பகுதிகளில் தண்ணீா் இல்லை என்கின்றனா். இருந்தாலும் நமது உரிமையான காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு முதல்வா் கேட்டுப் பெறுவாா் என்றாா் அமைச்சா்.
பின்னா் தஞ்சாவூா் கரந்தையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வுச் சேவை மையத்தைத் திறந்துவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘மேக்கேதாட்டில் அணை கட்டுவதை கா்நாடக அரசு நிறுத்த வேண்டும்’

மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடக முதல்வா் பொய் சொல்கிறாா்! - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

மேக்கேதாட்டில் அணை கட்டுவது தமிழக மக்களுக்கு எதிரான இனப்படுகொலை: அன்புமணி
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



