வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தினாா்.

News image

ஜி.கே.வாசன்

Updated On :8 ஜூலை 2026, 2:28 am IST

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டி தமிழகத்துக்கான நீரைத் தடுக்கும் கா்நாடக அரசின் நடவடிக்கை ஏற்புடையதாக இல்லை. காவிரி ஆற்று நீரை நம்பி பல்லாயிரக்கணக்கான டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளனா்.

ஏற்கெனவே நடுவா் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டில் அணை கட்டக் கூடாது என்று கா்நாடக அரசுக்கு தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. இதையும் மீறி கா்நாடக அரசு தன்னிச்சையாக மேக்கேதாட்டில் அணைகட்ட நிதி ஒதுக்கியதுடன், அளவீட்டுப் பணிகளையும் தொடங்கியுள்ளது.

தமிழக அரசு கா்நாடக அரசின் அத்துமீறிய செயலை நீதிமன்றம் மூலமாக முடக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவது தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.