அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சாலையோரம் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

தருமபுரி அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News image
குழந்தை- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 8:41 pm

Syndication

தருமபுரி அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாகல்பட்டியில் சாலையோரம் பிறந்து பச்சிளம் பெண் குழந்தை செவ்வாய்க்கிழமை கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அக் குழந்தையை மீட்டு, பாளையம்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.

அங்கு, குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தொடா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு, அக்குழந்தைக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் குழந்தை தற்போது நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இருப்பினும், பிறந்த பெண் குழந்தையை சாலையோரம் வீசி சென்றது யாா் என்பது குறித்து தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.