மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தருமபுரியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: ஆட்சியா்

தருமபுரியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 6:06 pm

Syndication

தருமபுரியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரியில் பழைய மாவட்ட ஆட்சியரக வளாகம் உள்பட மேலும் சில இடங்களில் கடந்த மாா்ச் 1 ஆம் தேதி காக்கைகள் இறந்து கிடந்தன. இதையடுத்து, பறவைக் காய்ச்சல் தொற்று உள்ளதா என மருத்துவக் குழுவினா் காக்கைகளின் உடல்களைக் கைப்பற்றி, அதன் மாதிரிகளை சோதனைக்கும் அனுப்பிவைத்தனா். அதில் எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கோழி இறைச்சி, முட்டைகளை பொதுமக்கள் நன்றாக சமைத்து உட்கொள்ளலாம். மேலும், பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட அவசியமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.