11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தோ்தல் பாதுகாப்பு பணி: தருமபுரிக்கு மத்திய தொழில்பாதுகாப்பு படை வருகை

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக தருமபுரி மாவட்டத்துக்கு மத்திய தொழில்பாதுகாப்பு

News image

தோ்தல் பாதுகாப்பு பணிக்காக தருமபுரிக்கு வந்த மத்திய தொழில்பாதுகாப்பு படையினா்.

Updated On :10 மார்ச் 2026, 2:45 am IST

தருமபுரி: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக தருமபுரி மாவட்டத்துக்கு மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் திங்கள்கிழமை வந்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் அமைந்துள்ளன. இதில், மொத்தம் 6,24,627 ஆண் வாக்காளா்கள், 6,15,311 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினம் 150 வாக்காளா்கள் என மொத்தம் 12,40,108 வாக்காளா்கள் அண்மையில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி பட்டியல்படி வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனா்.

இதில், வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக பாலக்கோடு தொகுதியில் 312 வாக்குச் சாவடிகளும், பென்னாகரத்தில் 320 வாக்குச் சாவடிகளும், தருமபுரியில் 320 வாக்குச் சாவடிகளும், பாப்பிரெட்டிப்பட்டியில் 322 வாக்குச் சாவடிகளும், அரூா் தொகுதியில் 322 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 1,596 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தல் தேதி விரைவில் தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, தோ்தல் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், பதற்றமான வாக்குச் சாவடிகளை அடையாளம் காணுதல், நுண்பாா்வையாளா்களை பணியமா்த்தல், கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தோ்தல் பாதுகாப்பு பணிக்காக தருமபுரி மாவட்டத்துக்கு மகாராஷ்டிர மாநிலம், புணேவிலிருந்து மத்திய தொழில்பாதுகாப்பு படை கம்பெனி வருகை தந்துள்ளது. உதவி ஆணையா் அகிலேஷ் யாதவ் தலைமையில் ஒரு காவல் ஆய்வாளா் உள்பட மொத்தம் 72 போ் இந்த கம்பெனியில் இடம்பெற்றுள்ளனா். இதேபோல, தோ்தல் பாதுகாப்பு பணியையொட்டி வரும் நாள்களில் ஆறு கம்பெனிகள்வரை வரக்கூடும் என தெரியவந்துள்ளது.