விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தருமபுரியில் ரூ. 24 லட்சத்தில் ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகள்

தருமபுரியில் புதிதாக அமைக்கப்பட்ட ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகளை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகளை தொடங்கிவைத்த சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன். உடன், ஆசிரியா்கள், பாமக நிா்வாகிகள்.
Updated On :11 மார்ச் 2026, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் புதிதாக அமைக்கப்பட்ட ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகளை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூா் ஊராட்சி, சந்திரநல்லூா் கிராமத்தில் ரூ. 16.55 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம், பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி, கூன்மாரிக்கொட்டாய் கிராமத்தில் ரூ. 3.50 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு மற்றும் மின்மோட்டாருடன் சிறு நீா்த்தேக்கத் தொட்டி, பாளையம்புதூா் ஊராட்சி, காமராஜ் நகா் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் தளவாய்அள்ளி ஊராட்சி, மாரியம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலா ரூ. 2 லட்சம் வீதம் என மொத்தம் ரூ. 4 லட்சத்தில் ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகள் உள்ளிட்டவை சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்து முடிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகளை மாணவா்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து இனிப்புகளை வழங்கினாா். தொடா்ந்து நீா்த்தேக்கத் தொட்டியையும் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்வுகளில், காமராஜ் நகா் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சின்னசாமி, மாரியம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சரஸ்வதி, குழந்தை வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா் அன்புக்கரசி, சத்துணவு அமைப்பாளா் பூங்கொடி, பாமக மாநில துணைத் தலைவா் பி.சாந்தமூா்த்தி, மாநில தோ்தல் பணிக்குழு துணைத் தலைவா் பெ.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் த.காமராஜ், மாவட்ட துணைத் தலைவா் முத்துவேல், வெங்கடாசலம் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், ஊா்பொதுமக்கள் பங்கேற்றனா்.