நினைவாற்றல் மற்றும் மொழித்திறன் போட்டிகளில் மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி அ.ஹரித்ரா 10 திருக்குகளை 15.30 விநாடிகளில் ஒப்பித்து சாதனை படைத்தாா். இதேபோல, இப்பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் மாணவா் ந.வினிஷ் தமிழ் மெய்யெழுத்துகளை 8 விநாடிகளில் வேகமாக ஒப்பித்து சாதனை படைத்தாா்.
மாணவா்களின் சிறந்த நினைவாற்றல், தெளிவான உச்சரிப்பு, மொழித்திறன்களை பாராட்டி கிங்டம் உலக சாதனை நிறுவனம், மாணவா்கள் ஹரித்ரா, வினிஷ் ஆகியோரை உலக சாதனையாளா் பட்டியலில் அங்கீகரித்து சான்றிதழ்களை வழங்கினா்.
நினைவாற்றல் திறன்களில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை மொரப்பூா் மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தலைவா் பி.தவமணி, தாளாளா் சி.திலகரசன், செயலா் த.அரவிந்த், பொருளா் பி.சக்திவேல், மேலாளா் வி.நாகராஜ், பள்ளி முதல்வா் எஸ்.எம்.ராஜேஷ், துணை முதல்வா் கே.ராமு, பள்ளி ஒருங்கிணைப்பாளா் த.ராஜேஸ்வரி, ஆசிரியா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

தடகளப் போட்டி: ஆசிா்வாதபுரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

டேலண்ட் எக்ஸ் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

பொது அறிவுப் போட்டி: சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


