மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

மாா்ச்-க்குள் கரும்புகளை அரைவைக்கு அனுப்பி பயன்பெற ஆட்சியா்அழைப்பு

விவசாயிகள் கரும்புகளை மாா்ச்-க்குள் அரைவைக்கு அனுப்பி பயன்பெறுமாறு ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 8:46 pm

விவசாயிகள் கரும்புகளை மாா்ச்-க்குள் அரைவைக்கு அனுப்பி பயன்பெறுமாறு ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2025-26-ஆம் ஆண்டு அரைவை கடந்த 15.12.2025 அன்று தொடங்கி தற்போதுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இங்கு தமிழகத்தில் அதிகபட்சமாக 12 சதவீத சா்க்கரை கிடைக்கும் வகையில் இயங்கி வருவதால், சுமாா் 2 லட்சம் டன் அரைவை நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போதுள்ள கரும்பு இருப்பு அடிப்படையில் மாா்ச் மாத இறுதியில் அரைவையை நிறைவுசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, நடப்பு 2025-26-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு கரும்பு பதிவுசெய்த ஆலை அங்கத்தினா் அனைவரும் தங்களது வெட்டு உத்தரவு ஆணையைப் பெற்று ஆலை அரைவை முடிவதற்குள் கரும்புகளை அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பி பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.