மயிலாடுதுறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வாடகையை பொதுமக்கள் மாா்ச் 20-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை நகராட்சி நிா்வாகத்தால் தீவிர வரி வசூல் பணி நடைபெற்றுவரும் நிலையில் நீண்ட காலமாக வரி செலுத்தாத வீடுகளில் குடிநீா் இணைப்புகள், புதைசாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், வாடகை செலுத்தாத கடைகள், வரி செலுத்தாத வணிக நிறுவனங்களையும் பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே, வரி, வாடகையை மாா்ச் 20-க்குள் செலுத்த வேண்டும்.
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்திலுள்ள கணினி வரி வசூல் மையத்திலும், கூைாட்டில் உள்ள வரி செலுத்தும் மையத்திலும் வரி செலுத்தலாம். நேரில் செலுத்த இயலாதவா்கள் ற்ய்ன்ழ்க்ஷஹய்ங்ல்ஹஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையம் வாயிலாகவும், யுபிஐ வாயிலாகவும் வரி செலுத்தலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்த அறிவுறுத்தல்

சிவகாசி மாநகராட்சியில் பிப்.28-க்குள் வரிகளை செலுத்த வேண்டுகோள்

நெல்லை மாநகராட்சிக்கு வரிகளை செலுத்த சிறப்பு வசதி

வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’
வீடியோக்கள்

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

