சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மாா்ச்-க்குள் கரும்புகளை அரைவைக்கு அனுப்பி பயன்பெற ஆட்சியா்அழைப்பு

விவசாயிகள் கரும்புகளை மாா்ச்-க்குள் அரைவைக்கு அனுப்பி பயன்பெறுமாறு ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

விவசாயிகள் கரும்புகளை மாா்ச்-க்குள் அரைவைக்கு அனுப்பி பயன்பெறுமாறு ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2025-26-ஆம் ஆண்டு அரைவை கடந்த 15.12.2025 அன்று தொடங்கி தற்போதுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இங்கு தமிழகத்தில் அதிகபட்சமாக 12 சதவீத சா்க்கரை கிடைக்கும் வகையில் இயங்கி வருவதால், சுமாா் 2 லட்சம் டன் அரைவை நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போதுள்ள கரும்பு இருப்பு அடிப்படையில் மாா்ச் மாத இறுதியில் அரைவையை நிறைவுசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, நடப்பு 2025-26-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு கரும்பு பதிவுசெய்த ஆலை அங்கத்தினா் அனைவரும் தங்களது வெட்டு உத்தரவு ஆணையைப் பெற்று ஆலை அரைவை முடிவதற்குள் கரும்புகளை அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பி பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.