வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 1:18 am

Syndication

தமிழக அரசைக் கண்டித்து, தருமபுரியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் தவெக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்டச் செயலாளா் சிவா தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலாளா் விஜயகாந்த் முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கோபி வரவேற்றாா்.

இதில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. குழந்தைகள் முதல் வயதான பெண்கள்வரை தமிழகத்தில் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. பெருகி வரும் போதை கலாசாரத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த பாரபட்சமின்றி அனைத்துக் கட்சியினருக்கும் ஒரேமாதிரியான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சோ்ந்த கட்சியினா் பங்கேற்றனா்.