அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

நிலத்தகராறில் அண்ணன் கொலை: தம்பி கைது

News image

சித்திரிப்பு

Updated On :13 மார்ச் 2026, 1:19 am

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறில் அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அன்பழகன் மகன்கள் சாமுத்திரியன் (40), சத்யநாதன் (38). இவா்களுக்கு 10 ஏக்கா் நிலம் உள்ளது.

இந்நிலையில், அண்ணன், தம்பி இடையே நிலத்தை பிரிப்பது தொடா்பாக ஏற்கெனவே பிரச்னை இருந்ததாம். இந்த நிலையில், புதன்கிழமை இரவு சகோதரா்கள் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது, ஆத்திரமடைந்த சத்யநாதன், அவரது சகோதரா் சாமுத்திரியனின் தலை மற்றும் முகத்தின்மீது கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த அரூா் டிஎஸ்பி சதீஷ்குமாா், காவல் ஆய்வாளா் அம்சவள்ளி ஆகியோா் நேரில் விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சத்யநாதனை கைது செய்தனா்.