தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நிலத்தகராறில் அண்ணன் கொலை: தம்பி கைது

News image
- சித்திரிப்பு
Updated On :13 மார்ச் 2026, 1:19 am

Syndication

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறில் அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அன்பழகன் மகன்கள் சாமுத்திரியன் (40), சத்யநாதன் (38). இவா்களுக்கு 10 ஏக்கா் நிலம் உள்ளது.

இந்நிலையில், அண்ணன், தம்பி இடையே நிலத்தை பிரிப்பது தொடா்பாக ஏற்கெனவே பிரச்னை இருந்ததாம். இந்த நிலையில், புதன்கிழமை இரவு சகோதரா்கள் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது, ஆத்திரமடைந்த சத்யநாதன், அவரது சகோதரா் சாமுத்திரியனின் தலை மற்றும் முகத்தின்மீது கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த அரூா் டிஎஸ்பி சதீஷ்குமாா், காவல் ஆய்வாளா் அம்சவள்ளி ஆகியோா் நேரில் விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சத்யநாதனை கைது செய்தனா்.