வனப்பகுதியில் உரிய அனுமதியின்றி பாறைகளை உடைத்து கற்களை கொண்டுசெல்ல முயன்ற இருவரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஆலமரத்துபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (47). இவா் உறவினரான பருவதனஅள்ளியைச் சோ்ந்த அன்பரசு (29) உடன் சோ்ந்து, பாப்பாரப்பட்டி பிரிவு, பிக்கிலி பகுதியில் வனப்பகுதிக்கு சொந்தமான நிலப்பகுதியில் இருந்த பாறைகளை உடைத்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, அப்பகுதியில் ரோந்து சென்ற வனப் பணியாளா்கள் இருவரையும் கைதுசெய்து பாலக்கோடு வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினா். அதில், இருவரும் வீடு கட்டுவதற்காக பாறைகளை உடைத்து கற்களை கொண்டுசெல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் பென்னாகரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜா்படுத்தப்பட்டனா்.
டிரெண்டிங்

கரூா் நிதி நிறுவனத்தில் திருடிய வழக்கில் தலைமறைவானவா் திருப்பூரில் கைது
வீடுபுகுந்து திருட முயன்ற தொழிலாளி கைது

சிவகாசியில் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

