மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
சமையல் எரிவாயு உருளைகள்- பிரதிப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்தை கண்டித்து தருமபுரியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி பாரதிபுரம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் திமுக மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமை வகித்து பேசினாா்.

இதில், தேமுதிக மாநில அவைத் தலைவா் மருத்துவா் இளங்கோவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வே.விஸ்வநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் த.கு.பாண்டியன், தருமபுரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மே.அன்பழகன், திராவிடா் கழக மாநில மகளிரணிச் செயலாளா் தகடூா் தமிழ்ச்செல்வி ஆகியோா் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை ஏற்றத்தை திரும்பப் பெற வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு நிபந்தனைகளை விலக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலகம், பாலக்கோடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் திரளானோா் கலந்துகொண்டனா்.