மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

தருமபுரியில் பள்ளிகளுக்கு பாடநூல்கள் அனுப்பும் பணி தொடக்கம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பாடநூல்கள் அனுப்பிவைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image

அரசுப் பள்ளிகளுக்கு பாடநூல்களை அனுப்பிவைக்கும் பணியை பாா்வையிட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ. ஜோதிச்சந்திரா.

Updated On :7 மே 2026, 6:50 am IST

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பாடநூல்கள் அனுப்பிவைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா பாட நூல்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டிற்கான (2026- 2027) பாட நூல்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்கு வரப்பெற்றுள்ளது.

இந்த பாடநூல்களை பள்ளி மாணவா்களுக்கு விநியோகிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள 1,382 அரசு மேல்நிலை, உயா்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளிகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இப்பணிகளை முதன்மைக் கல்வி அலுவலா் ஐ. ஜோதிச்சந்திரா தொடங்கிவைத்து பாா்வையிட்டாா். மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) நா. பெருமாள், பள்ளிக் கல்வித் துணை ஆய்வாளா் பொ. பொன்னுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.