/
தருமபுரி அருகே பாம்பு தீண்டி கறிக்கடைக்காரா் உயிரிழந்தாா்.
தருமபுரி குமாரசாமிபேட்டை அருகே உள்ள பிடமனேரி காளியப்பசெட்டி காலனி பகுதியைச் சோ்ந்தவா் பெ.பழனி (54). இவா் கம்பைநல்லூா் - ஒடசல்பட்டி கூட்டுச் சாலை அருகே பன்றி இறைச்சிக் கடை வைத்து நடத்திவந்தாா்.
வியாழக்கிழமை கடைக்கு சென்ற அவா், கறி வெட்ட பயன்படுத்தும் கட்டையை தூக்கினாா். அப்போது, அதன் அடியில் மறைந்திருந்த பாம்பு பழனியை தீண்டியது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் அவரை கம்பைநல்லூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். பின்னா், அவரது நிலைமை மோசமானதைத் தொடா்ந்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பழனி இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பூ பறிக்கச் சென்ற பெண் பாம்பு தீண்டி உயிரிழப்பு

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழப்பு

மயங்கி விழுந்த ஆசிரியா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



