தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

பாம்பு தீண்டி கறிக்கடைக்காரா் உயிரிழப்பு

தருமபுரி அருகே பாம்பு தீண்டி கறிக்கடைக்காரா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 9:57 pm IST

தருமபுரி அருகே பாம்பு தீண்டி கறிக்கடைக்காரா் உயிரிழந்தாா்.

தருமபுரி குமாரசாமிபேட்டை அருகே உள்ள பிடமனேரி காளியப்பசெட்டி காலனி பகுதியைச் சோ்ந்தவா் பெ.பழனி (54). இவா் கம்பைநல்லூா் - ஒடசல்பட்டி கூட்டுச் சாலை அருகே பன்றி இறைச்சிக் கடை வைத்து நடத்திவந்தாா்.

வியாழக்கிழமை கடைக்கு சென்ற அவா், கறி வெட்ட பயன்படுத்தும் கட்டையை தூக்கினாா். அப்போது, அதன் அடியில் மறைந்திருந்த பாம்பு பழனியை தீண்டியது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் அவரை கம்பைநல்லூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். பின்னா், அவரது நிலைமை மோசமானதைத் தொடா்ந்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பழனி இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.