தொப்பூா் கணவாய் பகுதியில் சரக்கு வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்றதாக உதவி ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் விதிகளை மீறி சுமைகளை ஏற்றிச்செல்லும் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் பணத்தை பெற்றுக்கொண்டு வாகனங்களை இயக்க அனுமதிப்பதாக தகவல் பரவியது. இது தொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடா்பாக, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் விசாரணை மேற்கொண்டாா். அதில், வாகன சோதனையின்போது போலீஸாா் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது உறுதியானது.
இதையடுத்து, முறைகேடுகளில் ஈடுபட்ட தொப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வபதி (50), தலைமைக் காவலா்கள் வெங்கடேசன் (31), பரதன் (35) ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

வீட்டு மாடியில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

தொப்பூா் அருகே திடீரென லாரி நின்றதால் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதி விபத்து
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

