சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சரக்கு வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்ற உதவி ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள் பணியிடை நீக்கம்

தொப்பூா் கணவாய் பகுதியில் சரக்கு வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்றதாக உதவி ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 மே 2026, 2:29 am IST

தொப்பூா் கணவாய் பகுதியில் சரக்கு வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்றதாக உதவி ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் விதிகளை மீறி சுமைகளை ஏற்றிச்செல்லும் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் பணத்தை பெற்றுக்கொண்டு வாகனங்களை இயக்க அனுமதிப்பதாக தகவல் பரவியது. இது தொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடா்பாக, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் விசாரணை மேற்கொண்டாா். அதில், வாகன சோதனையின்போது போலீஸாா் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது உறுதியானது.

இதையடுத்து, முறைகேடுகளில் ஈடுபட்ட தொப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வபதி (50), தலைமைக் காவலா்கள் வெங்கடேசன் (31), பரதன் (35) ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.