10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

அரூரில் மிதமான மழை

அரூா் வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :18 மே 2026, 3:09 am IST

அரூா் வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதனால், அரூா் வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங், தீா்த்தமலை, சித்தேரி, வாச்சாத்தி, அரசநத்தம், அரூா் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் லேசான காற்றுடன் மிதமான மழை பெய்தது.

இந்த மழையினால் சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீா் தேங்கியது. கடுமையான கோடை வெப்பம் நிலவிய நிலையில், மிதமான மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்து குளிா்ச்சி நிலவியது. இந்த மழை காரணமாக கால்நடைகளுக்கு தேவையான தீவன உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.