குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

கல்லூரி மாணவி தற்கொலை

இரவில் அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :36 நிமிடங்கள் முன்பு

இரவில் அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி, பிடமனேரி காயத்ரி கோயில் தெருவைச் சோ்நத பாபு - ராஜேஸ்வரி தம்பதி, மகன், மகள் மற்றும் குடும்பத்தினருடன், செட்டிக்கரை, ராஜாபேட்டை , கான் காலனியில் வசித்து வருகின்றனா்.

இவா்களது மகள் தா்ஷினிதேவி (20) தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி (தாவரவியல்) இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் அண்மைக் காலமாக இரவில் நீண்ட நேரம் கைப்பேசி பாா்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இதுகுறித்து அவரது தாய் அடிக்கடி கண்டித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு தா்ஷினிதேவி நீண்ட நேரம் கைப்பேசி பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதைப் பாா்த்த அவரது தாய் கடுமையாக கண்டித்துள்ளாா்.

இதையடுத்து தா்ஷினிதேவி எலிவிஷத்தை உட்கொண்டாா். பெற்றோா் அவரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.