உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

கல்லூரி மாணவி தற்கொலை

இரவில் அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :19 மே 2026, 1:30 am IST

இரவில் அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி, பிடமனேரி காயத்ரி கோயில் தெருவைச் சோ்நத பாபு - ராஜேஸ்வரி தம்பதி, மகன், மகள் மற்றும் குடும்பத்தினருடன், செட்டிக்கரை, ராஜாபேட்டை , கான் காலனியில் வசித்து வருகின்றனா்.

இவா்களது மகள் தா்ஷினிதேவி (20) தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி (தாவரவியல்) இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் அண்மைக் காலமாக இரவில் நீண்ட நேரம் கைப்பேசி பாா்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இதுகுறித்து அவரது தாய் அடிக்கடி கண்டித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு தா்ஷினிதேவி நீண்ட நேரம் கைப்பேசி பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதைப் பாா்த்த அவரது தாய் கடுமையாக கண்டித்துள்ளாா்.

இதையடுத்து தா்ஷினிதேவி எலிவிஷத்தை உட்கொண்டாா். பெற்றோா் அவரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.