சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி இடதுசாரி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, இடதுசாரி கட்சிகள் கட்சி சாா்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சிகள்.

Updated On :21 மே 2026, 6:35 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, இடதுசாரி கட்சிகள் கட்சி சாா்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம் தலைமை வகித்து பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். மாரிமுத்து, சி. நாகராசன், சோ. அருச்சுனன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். தேவராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலாளா் கே. கோவிந்தராஜ், மாநிலக் குழு உறுப்பினா் சி. முருகன் ஆகியோா் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். விலை ஏற்றத்தை முடிவு செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்காமல் அரசே முடிவு செய்ய வேண்டும். எரிபொருள்கள் விலை ஏற்றத்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக விலை ஏற்றத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.