சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது
அரூா் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளி காா்த்திகேயன் (47) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அரூா் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளி காா்த்திகேயன் (47) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டாரப் பகுதியில் 16 மற்றும் 18 வயதுடைய மனவளா்ச்சி குன்றிய இரண்டு சிறுமிகளுக்கு ஒருவா் மது போதையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது குறித்து சிறுமிகளின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், அரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜம்மனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி காா்த்திகேயன் (47) என்பவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



