கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

‘கொங்கு விரைவு ரயிலை மீண்டும் தருமபுரி வழியாக இயக்க வேண்டும்’

கொங்கு விரைவு ரயிலை மீண்டும் தருமபுரி, ஒசூா் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

train

ரயில் - பிரதிப் படம்

Published On :

கொங்கு விரைவு ரயிலை மீண்டும் தருமபுரி, ஒசூா் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் டி.வி.பாலாஜி மற்றும் பயணிகள் தென்மேற்கு ரயில்வே பொது மேலாளா் பி.ஆனந்திடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

கரோனா காலத்தில் தருமபுரி வழியாக இயக்கப்பட்ட கொங்கு விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது. பயணிகளின் நலன்கருதி இந்த விரைவு ரயிலை மீண்டும் தருமபுரி - ஒசூா் வழியாக இயக்க வேண்டும். அதேபோல, தருமபுரி ரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். நடைமேடைகளை இணைக்கும் தானியங்கி நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் அமைக்கும் பணிகள், ரயில் நிலையத்தின் முன்புற தோற்ற மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவற்றை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும், 2 மற்றும் 3-ஆம் நடைமேடைகளில் பயணிகள் தங்களுக்கான பெட்டிகளை எளிதாக கண்டறியும் வகையில் மின்னணு தகவல் பலகையில் விவரங்களை முறையாக காட்சிப்படுத்த வேண்டும்.

ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயிலை வாரத்துக்கு இருமுறை இயக்க வேண்டும். தருமபுரியிலிருந்து நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை வழித்தடத்தில் விரைவு ரயில்கள் இயக்க வேண்டும். எழும்பூரிலிருந்து சேலம்வரை இயக்கப்படும் விரைவு ரயில் சேவையை தருமபுரிவரை நீட்டித்து, மீண்டும் தருமபுரியிலிருந்து எழும்பூருக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.