எரிவாயு விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், ஊத்தங்கரை ஆர்.எல்.ஆர்.  இண்டேன் எரிவாயு முகவர் நிறுவனமும்
Updated on
1 min read

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், ஊத்தங்கரை ஆர்.எல்.ஆர்.  இண்டேன் எரிவாயு முகவர் நிறுவனமும் இனைந்து மாணவ- மாணவியருக்கு எரிவாயு சிக்கனம் மற்றும் தீ விபத்து தடுப்புப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எப்சிபா ஏஞ்சலாதுரைராஜ் தலைமை வகித்தார். தீ தடுப்புப் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை ஆர்.எல்.ஆர்.கேஸ். பணியாளர் மாரியப்பன், குழுவினர் மாணவ-மாணவியருக்கு சமையல் எரிவாயு பற்றிய செயல் விளக்கத்துடன் செய்து காட்டினர். மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவியர் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செல்வராஜ் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com