கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஜவளகிரி வனப்பகுதியில் ரோந்து சென்ற 3 வன ஊழியர்களைத் தாக்கிய 10 பேர் தப்பியோடிவிட்டனர்.
ஜவளகிரி அருகே கெட்டுணிசை கிராமத்தில் உள்ள ஏரிக்கு யானைகள் தண்ணீர் குடிக்க வந்த யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லவில்லை. இதுகுறித்து ஜவளகிரி வனச் சரகர் முருகேனுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து விவசாயப் பயிர்களைக் காக்கும் பொருட்டு வனக்காவலர் முருகன், வேட்டை தடுப்பு காவலர்கள் ஜெயக்குமார், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரும் கெட்டுணிசை கிராமத்துக்குச் சென்று யானைகளை விரட்ட முயன்றபோது அங்கு வந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விவசாயப் பயிர்களை யானைகள் மிதித்து சேதப்படுத்தியுள்ளது எனப் புகார் தெரிவித்தனர். அப்போது விவசாயிகளுக்கும், வனத்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 வனத்துறையினரை விவசாயிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்த வன ஊழியர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபி

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும்: முன்னாள் வீரர்

குறைவான மின்செலவு... பட்ஜெட் விலையில் ஹையர் மைக்ரோவேவ் ஓவன்!
விடியோக்கள்

தனுஷ்க்கும் அரசியல் ஆசை| Valaipechu Anthanan Interview | Dhanush | National Film Award | TVK| CM Vijay


