காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பாம்பாறு அணை பகுதியில்  சேதமடைந்த சாலை

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து பள்ளம்

Updated On :22 அக்டோபர் 2018, 4:10 am

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டதால் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறையிடம் முறையிட்டும் தற்காலிகமாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காவல் துறை சார்பில் ஜேசிபி வாகனம் மூலம் மிகவும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையிலிருந்த சாலையை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பெங்களூரு- புதுவை தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனினும், விபத்து ஏற்படுத்தும் வகையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.