சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பாம்பாறு அணை பகுதியில்  சேதமடைந்த சாலை

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து பள்ளம்

Updated On :22 அக்டோபர் 2018, 4:10 am

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டதால் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறையிடம் முறையிட்டும் தற்காலிகமாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காவல் துறை சார்பில் ஜேசிபி வாகனம் மூலம் மிகவும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையிலிருந்த சாலையை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பெங்களூரு- புதுவை தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனினும், விபத்து ஏற்படுத்தும் வகையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.