தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

லாரி திருடியதாக கர்நாடக இளைஞர்கள் 3 பேர் கைது

காவேரிப்பட்டணம் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலையோரமாக நிறுத்தப்பட்ட லாரியை ரூ. 30 லட்சம்

Updated On :24 ஜனவரி 2019, 2:32 am IST

காவேரிப்பட்டணம் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலையோரமாக நிறுத்தப்பட்ட லாரியை ரூ. 30 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களுடன் திருடிச் சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மதுரை உசிலம்பட்டி, எழுமலை நகரைச் சேர்ந்தவர் பெரிய கருப்பு.  லாரி ஓட்டுநர். இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு, பெங்களூரிலிருந்து கேரள மாநிலம், கொச்சி நோக்கி வீட்டு உபயோகப் பொருள்களை லாரியில்  ஏற்றிக் கொண்டு சென்றார்.
 கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலையோராக லாரியை நிறுத்தினார்.  சிறிது நேரத்துக்குப் பிறகு,  திரும்பி வந்து பார்த்தபோது,   லாரி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  பல்வேறு இடங்களில் தேடியும் லாரி கிடைக்காத நிலையில்,  இதுகுறித்து, காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  இதுகுறித்து, வழக்குப் பதிந்த காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி,  மேற்கொண்ட விசாரணையில் ஆந்திர மாநில எல்லையான குருவிநாயனப்பள்ளி சோதனைச் சாவடி அருகே லாரி நிற்பது தெரியவந்தது.  அங்கு சென்ற போலீஸார் லாரியை மீட்டனர்.
    காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான தனிப் படையினர் மேற்கொண்ட விசாரணையில்,  குற்றவாளிகள் கர்நாடகத்தில் மறைந்திருப்பது தகவல் அறிந்ததும் அங்கு சென்ற போலீஸார் கோலார் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர்களான நரேஷ் (26),  மது (21), ஒசகோட்டாவைச் சேர்ந்த சஞ்சய் (21) ஆகியோரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள சுகாஷ் என்பவரைத் தேடி வருகின்றனர்.  மேலும்,  லாரி திருட்டுக்குப் பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை கைது செய்த தனி ப்படையினரை காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.