ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

News image
ஊத்தங்கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Updated On :18 ஆகஸ்ட் 2020, 5:56 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர், சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் இரா. சேகர் தலைமை வகித்தார். 

விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயராமன் மாவட்ட குழு உறுப்பினர் மகேஸ்வரன் ஏ.ஏ.ஓய் எப் ஒன்றிய செயலாளர் மணிமாறன் ஒன்றிய தலைவர் பரதன், ஒன்றிய இந்தியதேசிய மாதர் சங்க சம்மேளனம் பொறுப்பாளர் ரஷ்யா பேகம், மாவட்டக்குழு உறுப்பினர் சுபாஷ், ஒன்றிய தலைவர் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகமான பாலன் இல்லத்தையும், அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவையும் இணையதளங்களில் அவதூறு செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத கண்டித்தும் குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி மத்திய மாநில அரசை கண்டித்து மாநில அளவிலான கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.