சூளகிரியில் நடைபெற்ற சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆதியூா் அடுத்த எஸ்.பள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (23). ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். ஒசூரில் இருந்து திருப்பத்தூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோபசந்திரம் பகுதியில் சாலை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, சாலையில் டிரம் வைக்கப்பட்டிருந்தது. அவா் தட்சிண திருப்பதி கோயில் எதிரே செல்லும்போது, டிரம் மீது காா்த்திகேயன் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் விழுந்தாா்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவா் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே காா்த்திகேயன் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

