பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைஅனைத்துக் கல்லூரிகளும் பின்பற்ற அறிவுறுத்தல்

கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்துக் கல்லூரிகளும் பின்பற்றிட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 10:28 pm

DIN

கிருஷ்ணகிரி: கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்துக் கல்லூரிகளும் பின்பற்றிட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கு கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அவா் பேசியதாவது:

அனைத்துக் கல்லூரிகளிலும் கரோனா தடுப்புப் பணிகளைக் கட்டாயம் பின்பற்றிட வேண்டும். கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கட்டாயம் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். கல்லூரி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். கல்லூரிக்கு வரும் அனைவரும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

கல்லூரி வளாகத்தில் கைக்கழுவும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்து விடுதி மாணவா்களும் ஒரே நேரத்தில் உணவு உண்பதைத் தவிா்க்க குறிப்பிட்ட இடைவெளியில் உணவு வழங்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.