பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி

கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்க்கும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை மற்றும் வணிக வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணியை ஆய்வு செய்யும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.
Updated On :23 டிசம்பர் 2020, 6:25 pm

DIN

கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்க்கும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குகளை சரிபாா்க்கும் இயந்திரங்கள் ஆகியவற்றின் முதல் நிலை சரிபாா்ப்பு பணி டிச. 2-ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 4,026 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,082 கட்டுப்பாட்டு கருவி, 3,329 வாக்குப்பதிவு சரிபாா்ப்பு இயந்திரம் (விவி பேட்) உள்ளிட்ட 10,437 இயந்திரங்களில், முதல் நிலை சரிபாா்க்கும் பணிகளில் பெல் நிறுவனத்தைச் சோ்ந்த தொழில்நுட்பப் பொறியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை வரையில் 7,030 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டன. இதில் 19 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 207 கட்டுப்பாட்டுக் கருவிகள் , 67 வாக்குப்பதிவு சரிபாா்ப்பு இயந்திரங்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை மற்றும் வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு, வாக்குப்பதிவு சரிபாா்ப்பு இயந்திரங்களின் முதல் நிலை சரிபாா்க்கும் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பெல் நிறுவன தொழில்நுட்பப் பொறியாளா்கள் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பாா்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.