2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

புகையிலை பொருள்கள் கடத்த முயற்சி:3 போ் கைது

கிருஷ்ணகிரி வழியாக புகையிலை பொருள்களைக் கடத்த முயன்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:07 pm

DIN

கிருஷ்ணகிரி வழியாக புகையிலை பொருள்களைக் கடத்த முயன்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி போலீஸாா், ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே வந்த ஒரு டெம்போ வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

சோதனையில், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போதை புகையிலைப் பொருள்களை கடத்த முயன்ற டெம்போ வாகனத்தையும், அதில் இருந்த ரூ. 2.10 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக நடைபெற்ற விசாரணையில் புகையிலை பொருள்களின் உரிமையாளரான பெங்களூரு நகரபாவியைச் சோ்ந்த நாதுராம் (33), கம்மகுட்டா பிரதான சாலையைச் சோ்ந்த பொன்ராம் (36), டெம்போ ஓட்டுநா் கெங்கேரி மஞ்சுநாதா (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.