பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டு வேலு தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் முகக்கவசம் அணிந்து பர்கூர் பேருந்து நிலையம், ஜெகதேவி ரோடு, டெக்ஸ்டைல்ஸ் மார்க்கெட் பகுதி, திருப்பத்தூர் ரோடு, அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். அப்போது தீபாவளியின் போது பட்டாசு வெடித்து ஏதாவது விபத்து நேரிட்டால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தரவும் பொதுமக்கள் அனைவரும் தீபாவளி நேரத்தில் ஏற்படும் தீவிபத்துகள் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்குமாறு மேலும் தீ பரவாமலும் விபத்து அதிகரிக்காமலும் தடுக்க தீயணைப்புத்துறையினர் எந்த நேரமும் தயார் நிலையில் இருப்பதாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.