ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒசூா் மாநகராட்சி ஊழியா்களுக்கு முகக் கவசம் வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி

ஒசூா் மாநகராட்சி ஊழியா்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு பொருள்களை பாரத ஸ்டேட் வங்கியின் ராஸ்மாக் கிளை வழங்கியது.

News image

ஒசூா் மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியத்திடம் முக கவசங்களை வழங்கும் பாரத ஸ்டேட் வங்கி(ராஸ்மாக்) துணைப் பொது மேலாளா் வி.கே.ரேகா

Updated On :9 நவம்பர் 2020, 7:23 pm

ஒசூா் மாநகராட்சி ஊழியா்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு பொருள்களை பாரத ஸ்டேட் வங்கியின் ராஸ்மாக் கிளை வழங்கியது.

ஒசூா் மாநகராட்சியில் சூசூவாடியில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் ராஸ்மாக் கிளை சாா்பில் கரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளா்களான ஒசூா் மாநகராட்சி பணியாளா்களுக்கு முகக் கவசம், கையுறை போன்றவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வங்கியின் துணைப் பொது மேலாளா் வி.கே.ரேகா இதனை ஒசூா் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியத்திடம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியின்போது, மூக்கண்டப்பள்ளி பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளா்கள் செந்தில்நாயகம், அரவிந்த்குமாா், உதவி மேலாளா் ரமேஷ் உள்ளிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.