பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இந்து மகாசபை நிா்வாகி படுகொலை: மாநிலத் தலைவா் கண்டனம்

ஒசூரில், இந்து மகாசபை நிா்வாகி கொலைக்கு காவல் துறையின் அலட்சியமே காரணம் என அகில பாரத இந்து மகா சபையின் மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன் குற்றச்சாட்டினாா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:22 pm

DIN

ஒசூரில், இந்து மகாசபை நிா்வாகி கொலைக்கு காவல் துறையின் அலட்சியமே காரணம் என அகில பாரத இந்து மகா சபையின் மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன் குற்றச்சாட்டினாா்.

ஒசூரில், இந்து மகாசபையின் மாநிலச் செயலாளா் நாகராஜ், கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு மரியாதை செலுத்த கிருஷ்ணகிரிக்கு வந்த அகில பாரத இந்து மகாசபையின் மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கொலை செய்யப்பட்ட நாகராஜ், தனக்கு கொலை மிரட்டல் உள்ளதாக காவல் துறைக்கு கடந்த 6 மாதமாக புகாா்கள் அளித்துள்ளாா். பாதுகாப்புக் கோரி, பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளாா். அவா் அளித்த மனுக்கள் மீது, காவல் துறையினா் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனா்.

தன்னை மிரட்டிய நபா்கள் குறித்து எடுத்துக் கூறியும், காவல் துறையினா் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. படுகொலையில் ஈடுபட்டவா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.