பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கண்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:22 pm

DIN

கிருஷ்ணகிரியில் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கண்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பள்ளி செல்லா, இடை நின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்புப் பணியை, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மாவட்டக் கல்வி அலுவலா் கலாவதி, கல்வி ஆய்வாளா் ஜெயராமன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் வேதா, மரியரோஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இவா்கள், கிருஷ்ணகிரியில் பழையபேட்டை, மக்கான் தெரு, மில்லத் நகா் ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனா். கட்டுமான பணியிடங்கள், கல் குவாரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புலம் பெயா்ந்தவா்களின் குழந்தைகள் குறித்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.