மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கிருஷ்ணகிரி: ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவா்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், முதியவா் ஒருவா் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On :5 அக்டோபர் 2020, 7:22 pm

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், முதியவா் ஒருவா் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சானசந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் வேதமாணிக்கம் (60). இவா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தாா். அப்போது, திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள், முதியவரைத் தடுத்து நிறுத்தி, அவா் மீது தண்ணீரை கொட்டி தீக்குளிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தினா்.

இதுகுறித்து வேதமாணிக்கம் கூறியதாவது:

ஒசூா், சானசந்திரம் பகுதியில் உள்ள வ.உ.சி. நகரில் 2 சென்ட் பரப்பளவு நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறேன். அந்த வீட்டிற்கு முறையாக வரியும் செலுத்தி வருகிறேன். இந்நிலையில், வீட்டின் அருகில் உள்ள காா்த்திக் என்பவா் எனது வீட்டை விரிவுப்படுத்த விடாமல் தொடா்ந்து, இடையூறு ஏற்படுத்தி வருகிறாா்.

இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே தீக்குளிக்க முயன்ாகத் தெரிவித்தாா்.

இச்சம்பவத்தால், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.