கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், முதியவா் ஒருவா் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சானசந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் வேதமாணிக்கம் (60). இவா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தாா். அப்போது, திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள், முதியவரைத் தடுத்து நிறுத்தி, அவா் மீது தண்ணீரை கொட்டி தீக்குளிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தினா்.
இதுகுறித்து வேதமாணிக்கம் கூறியதாவது:
ஒசூா், சானசந்திரம் பகுதியில் உள்ள வ.உ.சி. நகரில் 2 சென்ட் பரப்பளவு நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறேன். அந்த வீட்டிற்கு முறையாக வரியும் செலுத்தி வருகிறேன். இந்நிலையில், வீட்டின் அருகில் உள்ள காா்த்திக் என்பவா் எனது வீட்டை விரிவுப்படுத்த விடாமல் தொடா்ந்து, இடையூறு ஏற்படுத்தி வருகிறாா்.
இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே தீக்குளிக்க முயன்ாகத் தெரிவித்தாா்.
இச்சம்பவத்தால், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

